வனப் பாதுகாப்பு குறித்த கண்காணிப்புக் குழுவின் அறிக்கையை வனத்துறை மறுத்துள்ளது

நாட்டில் காடுகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ரிம்பாவாட்ச்சின் முயற்சிகளைத் தீபகற்ப மலேசியா வனவியல் துறை (JPSM) வரவேற்றுள்ளது.

இருப்பினும், குழுவின் சமீபத்திய அறிக்கைகுறித்த கவலைகளை எழுப்பியது.

வனத் தோட்டம்பற்றிய குழுவின் புரிதல் அரசாங்கத்தால் பயன்படுத்தப்படும் வரையறையிலிருந்து வேறுபட்டது என்று JPSM சுட்டிக்காட்டியது.

“உண்மையில், உணவு மற்றும் விவசாய அமைப்பின் (Food and Agriculture Organisation) கீழ், வன வளர்ப்பு என்பது கட்டுப்பாடு மற்றும் பரிந்துரைக்கப்பட்ட வன நடைமுறைகள்மூலம் மேற்கொள்ளப்படக்கூடிய நடவடிக்கைகளில் ஒன்றாகும்”.

“இந்த வேறுபாடுகள் மற்றும் முரண்பாடுகள் மலேசியாவில் வன இழப்பின் அளவு மிகவும் பெரியதாக இருக்கும், இது 2.3 மில்லியன் ஹெக்டேரை எட்டும் என்று ரிம்பாவாட்ச் கணித்ததற்குக் காரணம் என்று கண்டறியப்பட்டது,” என்று துறை இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

யுனைடேட்நேசனல் சபையின் (UN) கட்டமைப்பின் கீழ் வனவியல் சூழலில், மலேசியா ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் வனத் தரவுகளை FAO ஒருங்கிணைத்த வன வள மதிப்பீட்டு (FRA) அறிக்கையின் மூலம் தெரிவிக்கிறது என்று JPSMவலியுறுத்தியது.

கூடுதலாக, உயிரியல் பன்முகத்தன்மை பற்றிய மாநாடு (CBD) மற்றும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு மாநாடு (UNFCCC) போன்ற சர்வதேச மரபுகளின் கீழ் பல காலமுறை அறிக்கைகள் உள்ளன, இதில் வன தரவு அறிக்கையும் அடங்கும்.

“நாட்டின் நிலப்பரப்பில் குறைந்தது 50 சதவீதத்தையாவது காடு மற்றும் மரங்கள் நிறைந்ததாகப் பராமரிக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது – இது 1992 இல் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடந்த புவி உச்சி மாநாட்டில் செய்யப்பட்ட தேசிய உறுதிப்பாடாகும்”.

“அப்போது முதல், உறுதிமொழி நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதற்காக அரசாங்கத்தால் பல்வேறு முயற்சிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாகத் தீபகற்ப மலேசியாவில் உள்ள வனப் பகுதிகளைப் பராமரிக்கவும், அதன் வளர்ச்சியைச் சமநிலைப்படுத்தவும் பராமரிக்கவும் நாட்டின் இலக்குகளுக்கு ஏற்ப அனைத்து உத்திகளும் இருப்பதை உறுதிசெய்யத் தொடர்ந்து பணியாற்றுவதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

அதை அடைய, மாநில அரசு மற்றும் பிற பங்குதாரர்களின் ஒத்துழைப்பு மற்றும் உதவி தேவை என்று JPSM கூறியது.

மார்ச் 20 அன்று, பேராக், பினாங்கு மற்றும் மலாக்கா ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பகுதிகளைவிட அதிகமான நிலப்பரப்பை உள்ளடக்கிய, எதிர்காலத்தில் நாட்டில் காடுகள் பெருமளவில் அழிக்கப்படலாம் என்று ரிம்பாவாட்ச் ஒரு எச்சரிக்கையை வெளியிட்டது.

நாட்டில் சுமார் 2.34 மில்லியன் ஹெக்டேர் காடுகள் காடழிப்புக்கு திட்டமிடப்பட்டுள்ளதாகத் தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது – கிட்டத்தட்ட பகாங்கின் அளவு.

காடழிப்பு அபாயமுள்ள ஐந்து பிரிவுகளை இந்தக் குழுப் பகுப்பாய்வு செய்தது, இதில் காடுகள் இல்லாத நிலங்களின் வனமல்லாத மண்டலம், வன நிலத்தின் ரியல் எஸ்டேட் பட்டியல்கள், வன காப்பகம் நீக்கம், அங்கீகரிக்கப்பட்ட வன ஆபத்து சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் மற்றும் பிற தரவுகள் ஆகியவை அடங்கும்.

அவர்களின் மதிப்பீட்டின் அடிப்படையில், அத்தகைய காடழிப்பு மலேசியாவின் காடுகளின் பரப்பளவை 15.6 மில்லியன் ஹெக்டேராகக் குறைக்கும் என்று ரிம்பாவாட்ச் எச்சரித்தது, இது நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 47.35 சதவீதமாகும்.

இது 2017 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டது, இது மலேசியாவின் காடுகளின் பரப்பளவு 18.33 மில்லியன் ஹெக்டேர் அல்லது நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 55.2 சதவீதம் என்று கூறியது.

மரத்தோட்டங்களுக்கான அனைத்து காடழிப்பு திட்டங்களையும் முடிவுக்குக் கொண்டுவரவும், இயற்கை காடுகளை மட்டுமே உள்ளடக்கும் வகையில் வனப்பரப்பின் வரையறையைத் திருத்தவும் குழு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டது.

புத்ராஜெயா அதன் 50 சதவீத வனப்பரப்பை விரிவுபடுத்தவும், இயற்கையான காடுகளைப் பராமரிக்க ஒரு மூலோபாயத்தை உருவாக்கவும் அவர்கள் வலியுறுத்தினர்.