Kedah Agro Holdings அமைப்பு ரிம 560k சம்பள பாக்கியை ஹரி ராயாவிற்கு முன் செலுத்த உள்ளது

Kedah Agro Holdings, வரவிருக்கும் ஹரி ராயா ஐடில்பித்ரி கொண்டாட்டத்திற்கு முன், 24 தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளமாக ரிம 560,000 செலுத்தும் என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற Kedah Agro Holdings வாரியக் கூட்டத்தில் மந்திரிபெசார் இன்கார்பரேட்டட் துணை நிறுவனத்தின் செயல்பாடுகளை நிறுத்த முடிவு செய்ததாகச் சிம் கூறினார்.

“ஆகையால், மார்ச் மாதம் முதல் மூன்று மாதங்களுக்கு, அறிவிப்புக்குப் பதிலாக அனைத்து சலுகைகளும், சம்பளங்களும் வழங்கப்படும்,” என்று அமைச்சர் கேள்வி நேரத்தில் பூக்கிட் மெர்டஜம் எம். பி. நாடாளுமன்றத்திடம் தெரிவித்தார்.

“தொழிலாளர்கள் தங்கள் முதலாளிகளுக்கு எதிராகத் தொழிலாளர் வழக்கைத் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர், மேலும் தாமதமாகச் சம்பளம் வழங்குவதற்காக வேலை வாய்ப்புச் சட்டம் 1955 இன் பிரிவு 19 இன் கீழ் தீபகற்ப மலேசியா தொழிலாளர் துறை (JTKSM) விசாரணையைத் தொடங்கும்”.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதே சட்டத்தின் 99A பிரிவின் கீழ் முதலாளிகளுக்கு அபராதம் விதிக்கப்படலாம், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் ரிம. 50,000-க்கு மிகாமல், அமினோல்ஹுடா ஹாசனுக்கு (Harapan-Sri Gading) பதில் கூறினார்.

முன்னதாக, அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட 21 நாட்களுக்குள் அனைத்து புகார்களையும் ஆய்வு செய்ய  JTKSM உறுதிபூண்டுள்ளதாகச் சிம் மீண்டும் வலியுறுத்தினார்.

கடந்த வாரம், MBI கேடாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாபர் அன்வார் கஜாலி கூறுகையில், Kedah Agro Holdings செயல்பாடுகள்குறித்து மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.