லுண்டுவில் படகு கவிழ்ந்து விபத்து – 3 பேர் காணவில்லை, 17 பேர் உயிர் தப்பினர்

இன்று குச்சிங்கிலிருந்து சுமார் 72 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுங்கை கயன், கம்போங் செலாம்பிட், லுண்டு என்ற இடத்தில் படகு கவிழ்ந்ததில் மூன்று பள்ளி மாணவர்களைக் காணவில்லை, மேலும் 17 பேர் உயிர் தப்பினர்.

மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு மையத்தின் முதற்கட்ட தகவலின்படி, காணாமல் போனவர்களில் ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண என்று தெரிவித்தது.

“பதினைந்து மாணவர்கள் பாதுகாப்பாகத் தப்பிச் சென்றுள்ளனர், மற்ற மூன்று பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. உள்ளூர் கிராம மக்களால் தேடுதல் தொடர்கிறது,” என்று செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

படகில் 18 மாணவர்கள் மற்றும் வயது வந்த பெண் பயணி ஒருவர் பயணம் செய்ததாகச் செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார். கேப்டன் மற்றும் வயது வந்த பயணி உயிர் தப்பினர். முதற்கட்ட தேடுதல் மற்றும் மீட்பு பணியைக் கிராம மக்கள் மேற்கொண்டனர்.