துப்பாக்கியால் சுட்டனர், கத்தியால் குத்தினர் அரச குடும்பத்தினர்

பகாங் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னை கத்தியால் குத்தி சுட்டுக் கொல்லும் தாக்குதலில் ஈடுபட்டதாக எட்டு குழந்தைகளுக்கு  தந்தையான ஒரு சாலை கட்டுமானத் தொழிலாளி  குற்றம் சாட்டியுள்ளார்.

அலியாஸ் அவாங், 44, ஜூன் 6 அன்று குவாந்தனில் உள்ள ஒரு தொழுவத்தில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவத்தை  மலேசியாகினியிடம் கூறினார். பின்னர் அவர் ஜூன் 8 ஆம் தேதி போலீசில் புகார் செய்தார்.

எட்டு பிள்ளைகளின் தந்தை, அரச குடும்பத்துடன் தொடர்புடையவர் என நம்பப்படும் ஒரு நபரிடமிருந்து தொலைபேசி அழைப்பைப் பெற்றதன் பின்னர், அவரைச் சந்திப்பதற்காக சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்றார்.

“தெங்குவின் மகன் (அரச குடும்பம்) உட்பட 20 பேர் என்னைத் தாக்கினர்.

“அவர்களில் ஒருவர் என் வலது தொடையில் கத்தியால் குத்தினார். டெங்குவின் மகன் என் காலில் சுட்டார், ஆனால் குறி தவறவிட்டார், ”என்று அவர் கூறினார்.

அலியாஸ் (மேலே) தாக்குதல் சம்பவம் ரோம்பினில் உள்ள ஒரு நிலம் தொடர்பானது என்று அன்றிரவு,அறிந்ததாகக் கூறினார், அங்கு அவர் சாலை அமைப்பதில் ஈடுபட்டிருந்தார்.

மலேசியாகினி பார்வையிட்ட அவரது போலிஸ் அறிக்கையில், தொழிலாளி குவாந்தனில் உள்ள தெங்கு அம்புவான் அப்சான் மருத்துவமனையில் காயங்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளார்.

போலீஸ் அறிக்கையின்படி, அலியாஸ் தான் தொழுவத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டதாகவும்,  தாக்கியதாகவும் கூறினார்.

அந்தத் தொழிலாளி மலேசியாகினியிடம், காவல் துறையினர் தம்முடைய வாக்குமூலங்களைப் பதிவு செய்ய இரண்டு முறை அழைத்ததாகக் கூறினார்.

“சில நாட்களுக்கு முன்பு, என்னை கத்தியால் குத்திய நபரின் பெயரை உறுதிப்படுத்த போலீசார் என்னை மீண்டும் நிலையத்திற்கு அழைத்தனர்,” என்று அவர் மேலும் கூறினார்.

மலேசியாகினி பகாங் அரண்மனையையும், அரச குடும்பத்தையும் தொடர்பு கொண்டுள்ளது.

மூன்று பேரும் ஏழு நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட்டனர்

குவாந்தான் மாவட்ட காவல்துறைத் தலைவர் வான் முகமட் ஜஹாரி வான் புசு மலேசியாகினியிடம், முக்கிய சந்தேக நபராகக் கருதப்படும் ஒரு நபர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டு, போலீஸ் ஜாமீனில் வெளிவருவதற்கு முன்பு விசாரணைகளை எளிதாக்குவதற்காக ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

மேலும் இருவர் கைது செய்யப்பட்டதாகவும் ஆனால் அவர்களது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும், இந்த சம்பவத்தில் ராயல்டிக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் கேள்விக்கு வான் ஜஹாரி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

“இந்த வழக்கில் முதன்மை சந்தேக நபரை நாங்கள் கைது செய்துள்ளோம், மேலும் துணை அரசு வழக்கறிஞரின் மேலதிக அறிவுறுத்தல்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

இந்த சம்பவத்தின் போது துப்பாக்கி ஏந்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார்.

“மேலும் விசாரிக்க வேண்டிய அவசியம் இருந்தால், நாங்கள் அவ்வாறு செய்வோம். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்துவோம்,” என்றார்.

குற்றவியல் சட்டத்தின் 324 மற்றும் 148 பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டதாக வான் ஜஹாரி கூறினார்.