ரிம 400,000 ஊழல் விசாரணையில் தொழிலதிபரை MACC கைது செய்தது

மாநில அரசின் துணை நிறுவனத்திடமிருந்து நிலப் பயன்பாட்டு உரிமைகளைப் பெறுவதற்கு ஈடாக ரிம 400,000 லஞ்சம் கேட்டுப் பெற்றதாகக் கூறப்படும் ஒரு தொழிலதிபரைக் கெடா எம்ஏசிசி கைது செய்துள்ளது.

MACC வட்டாரத்தின்படி, 40 வயது மதிக்கத் தக்க சந்தேக நபர் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை அலோர் ஸ்டார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் எம்ஏசிசி தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து, மாஜிஸ்திரேட் சித்தி நோர்ஹிடாயா முகமட் நூர் இந்தத் தடுப்புக் காவல் உத்தரவைப் பிறப்பித்தார்.

நேற்று பிற்பகல் 3.25 மணியளவில் கெடா எம்ஏசிசி அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்தபோது தொழிலதிபர் கைது செய்யப்பட்டார்.

“கூட்டு முயற்சி திட்டத்திற்கான நில பயன்பாட்டு உரிமைகளை எளிதாக்குவதற்காகச் சந்தேக நபர் லஞ்சம் கேட்டதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன”.

“இந்தக் குற்றம் ஜூன் 2020 இல் செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது,” என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.

இதற்கிடையில், கெடா எம்ஏசிசி இயக்குநர் அஹ்மத் நிஜாம் இஸ்மாயில் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார், மேலும் இந்த வழக்கு எம்ஏசிசி சட்டம் 2009 இன் பிரிவு 16(a)(A) இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.