உணவகங்களில் வீட்டு உபயோக திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG) பயன்பாடுமீதான தடையை ஒத்திவைக்குமாறு டிஏபி இளைஞர் அமைப்பு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை நுகர்வோர்மீது சுமையை ஏற்படுத்தக்கூடும் என்றும், உணவு நிறுவனங்கள் விலைகளை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
டிஏபி இளைஞர் பொதுக் கொள்கைப் பணியகத் தலைவர் ஜேசன் என்ஜி, வணிக எல்பிஜியின் விலை உள்நாட்டு விலையைவிடக் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம் என்று எடுத்துரைத்தார், பல சிறிய உணவகங்களும் வணிகர்களும் இன்னும் தங்கள் வணிகங்களை நடத்த மானிய விலையில் எரிவாயுவை நம்பியுள்ளனர்.
“வணிக ரீதியான எல்பிஜிக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், (அத்தகைய வணிகர்கள்) கூடுதல் செலவுகளை வாடிக்கையாளர்களுக்கு மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை, இதனால் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்து இறுதியில் பொதுமக்களுக்குச் சுமையாகிவிடும்,” என்று அஸ்தகா சட்டமன்ற உறுப்பினர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பலர் வேலை சம்பந்தப்பட்ட காரணங்களுக்காகத் தங்கள் வீடுகளுக்கு வெளியே உணவகங்களைச் சார்ந்து இருப்பதை சுட்டிக்காட்டிய என்ஜி, கொள்கையின் “தீவிர அமலாக்கம்” ஒரு தொடர் விளைவை மற்றும் பரந்த பணவீக்க அழுத்தத்தைத் தூண்டக்கூடும் என்று எச்சரித்தார்.
தற்போதைய சவாலான பொருளாதார சூழ்நிலையில், மக்கள் ஏற்கனவே அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளால் சுமை அடைந்துள்ளனர்.
“அமலாக்க நடவடிக்கைகள் அவசரமாக எடுக்கப்பட்டால், அது உணவு நிறுவனங்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.
‘மானிய விலையில் கிடைக்கும் எல்பிஜி பயன்பாட்டை விரிவுபடுத்துங்கள்’
அவர் மேலும் 2021 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தின் பொது கணக்குக் குழு LPG மானியங்கள்குறித்து வெளியிட்ட அறிக்கையைச் சுட்டிக்காட்டினார். அந்த அறிக்கையில், LPG மானியங்களுக்குத் தகுதியான குழுக்களை அடையாளம் காணும் ஒரு திட்டத்தைப் பரிந்துரைத்து, நிதி அமைச்சகம் ஒரு அமைச்சரவை குறிப்பாணை வரைவை தயாரித்ததாக அவர் கூறியிருந்தார்.
கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்களின் நிர்வாகிகள், இஇரவுச் சந்தைவிற்பனையாளர்கள், உணவுக் கடைகள், வியாபாரிகள், உணவகங்கள் மற்றும் ஷாப்பிங் மால்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், விமான நிலையங்கள், நெடுஞ்சாலை ஓய்வுப் பகுதிகள் மற்றும் பிற இடங்களில் உள்ள சிற்றுண்டிச்சாலைகள் அல்லது உணவு விடுதிகளின் நிர்வாகிகள் இந்தக் குழுக்களில் அடங்குவர் என்று என்ஜி கூறினார்.
எனவே, பொதுமக்களை நேரடியாகப் பாதிப்பதைத் தவிர்க்க, மானிய விலையில் வழங்கப்படும் எல்பிஜி பபயன்பாட்டைத் தொழில்துறைசாராத பிரிவுகளுக்கும் விரிவுபடுத்துவது குறித்து உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் பரிசீலிக்க வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார்.
“இந்தக் கொகொள்கையைச் செயல்படுத்துவதற்கு முன்பு, தொழில்துறையினர் மற்றும் பொதுமக்களுடன் விரிவான ஈடுபாட்டு அமர்வுகளை அமைச்சகம் நடத்த வேண்டும், மேலும் பல்வேறு கோணங்களிலிருந்து ஒட்டுமொத்த தாக்கத்தை மதிப்பிட வேண்டும், இதனால் அதன் செயல்படுத்தல் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டதாகவும் நியாயமாகவும் இருக்கும்,” என்று என்ஜி வலியுறுத்தினார்.
மானிய விலையில் சமையல் எரிவாயுவை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, மே 1 முதல் “Ops Gasak” திட்டத்தை அமைச்சகம் செயல்படுத்தும் என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சர் ஆர்மிசான் அலி ஏப்ரல் 18 அன்று தெரிவித்தார்.
அரசாங்கத்தின் மீது குகுறிப்பிடத் தக்கநிதி தாக்கத்தை ஏற்படுத்துவதால், எல்பிஜி மானியங்களின் கசிவை அவசரமாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்று ஆர்மிசான் கூறினார்.
இந்தக் கொள்கையின் கீழ், உணவகங்கள் வணிக ரீதியான எல்பிஜிக்கு மாற வேண்டும், இது 14 கிலோ சிலிண்டருக்கு சுமார் ரிம 65 முதல் ரிம 70 வரை செலவாகும், இது முந்தைய மானிய விலையான ரிம 27 முதல் ரிம 30 வரை இருந்ததை விட இரண்டரை மடங்கு அதிகமாகும்.