உலக போட்டித்திறன் தரவரிசை (World Competitiveness Ranking) 2025 இல் மலேசியாவின் குறிப்பிடத் தக்க உயர்வு, மடானி அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட சீர்திருத்தங்கள் நேர்மறையான முடிவுகளைத் தருகின்றன என்பதற்கான தெளிவான சான்றாகும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.
WCR 2025 அறிக்கை, மலேசியா 2024 இல் 34 வது இடத்திலிருந்து 11 இடங்கள் முன்னேறி 23 வது இடத்திற்கு வந்துள்ளது, இது 2020 க்குப் பிறகு நாட்டின் சிறந்த செயல்திறன் ஆகும்.
வர்த்தகம், நிர்வாகத் திறன் மற்றும் முதலீட்டுச் சூழலில் நாட்டின் வலுவான செயல்திறன், உள்ளடக்கிய மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளத்தை உருவாக்குகிறது என்று நிதியமைச்சராகவும் இருக்கும் அன்வார் வலியுறுத்தினார்.
“அரசியல் உறுதிப்பாடு, முழு அரசு இயந்திரத்தின் அர்ப்பணிப்பு மற்றும் தனியார் துறையுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் மலேசியா குறிப்பிடத் தக்க முன்னேற்றங்களைச் செய்ய முடியும் என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம்”.
“இந்தச் சாதனை அனைத்து மலேசியர்களுக்கும் சொந்தமானது. 2033 ஆம் ஆண்டுக்குள் நாட்டை மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த பொருளாதாரங்களில் ஒன்றாக நிலைநிறுத்தி, நமது குழந்தைகளுக்குப் பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கான நமது பயணத்தில் இது ஒரு முக்கியமான மைல்கல்லாகும்,” என்று அவர் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
WCR ஆண்டுதோறும் சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட சர்வதேச மேலாண்மை மேம்பாட்டு நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது.
இது ஒரு விரிவான அறிக்கை ஆகும், இது நீண்ட கால செழிப்பிற்கு பங்களிக்கும் வணிக நட்புச் சூழலை உருவாக்கவும் நிலைநிறுத்தவும் உள்ள திறனை அடிப்படையாகக் கொண்டு பொருளாதாரங்களை மதிப்பிடுகிறது.