திரங்கானு மாணவர்கள் சண்டையை அரசியலாக்குபவர்களை பத்லினா கடுமையாகச் சாடுகிறார்.

திரங்கானுவில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டு மாணவர்கள் சம்பந்தப்பட்ட சமீபத்திய சண்டையை அரசியலாக்கிய சில தரப்பினரின் செயல்களைக் கல்வி அமைச்சர் பத்லினா சிடெக் இன்று கடுமையாகக் கண்டித்தார்.

சம்பந்தப்பட்ட மாணவர்களில் ஒருவரின் தாயார் தன்னுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார்.

“என்னுடன் தொடர்புடையதாக மாணவர்களின் தாய்மார்களில் ஒருவரை இணைக்கும் அவதூறு பொறுப்பற்றது மற்றும் தீங்கிழைக்கும். அந்த நபரை நான் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில், கொடுமைப்படுத்துதல் மற்றும் தவறான நடத்தைக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளின்படி, கல்வி அமைச்சகம்,  திரங்கானு மாநில கல்வித் துறைமூலம் நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பத்லினா கூறினார்.

மேலும், இந்தச் சம்பவம்குறித்து மேலும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சகத்தின் நேர்மைப் பிரிவுக்கு அவர் அறிவுறுத்தினார்.

“இந்தப் பிரச்சினையின் வளர்ச்சியை நான் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறேன், இது உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்”.

“மிரட்டல் மற்றும் பிற தவறான நடத்தைகளில் அமைச்சகம் சமரசம் செய்து கொள்ளாது. குற்றவாளிகள் எவருக்கும் எதிஎதிராகக் கடுமையானடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அனைத்து பள்ளி ஊழியர்களின் நல்வாழ்வுக்காக அனைத்து கல்வி நிறுவனங்களும் பாதுகாப்பான சூழலாக இருப்பதை உறுதி செய்வதற்கான அமைச்சகத்தின் உறுதிப்பாட்டையும் பத்லினா வலியுறுத்தினார்.