“மருத்துவமனையில் O, A மற்றும் B வகை இரத்தப் பிரிவுகளின் கையிருப்பு குறைந்து வருகிறது.”
“சரியான உறக்கம், போதிய நீர்ச்சத்து மற்றும் நல் ஆரோக்கியம் கொண்டவர்கள் சஹர் முடிந்து நான்கு மணி நேரத்திற்குப் பிறகு ரத்த தானம் செய்யலாம்.”
பினாங் மருத்துவமனை O, A மற்றும் B வகை இரத்தத்தின் இருப்பு குறைவாக இருப்பதால் இரத்த தானதாரர்களை அழைத்துள்ளது.
மருத்துவமனையின் இரத்த மாற்று மருத்துவப் பிரிவின் தலைவர் டாக்டர் நோர்ஹாசா அப்துல் ரஹீம் கூறுகையில், குறிப்பாக பண்டிகை காலத்தில் இரத்த சேமிப்பு போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.
“அவசரநிலை சம்பவங்கள், அறுவை சிகிச்சைகள், நீண்டநாள் நோயாளிகள் மற்றும் காலந்தோறும் இரத்த மாற்று தேவைப்படும் நோயாளிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய இரத்த சேமிப்பு அவசியமாகிறது,” என்று அவர் கூறினார்.
“பொது மக்களிடமிருந்து தொடர்ந்து இரத்த தானம் கிடைக்கவில்லை என்றால், நம்முடைய தற்போதைய இரத்த கையிருப்புகள் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய முடியாது,” என்று அவர் இன்று கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
ரமதான் மாதத்தில் மருத்துவமனை இரத்த வங்கியின் பணிநேரம்:
திங்கள் முதல் வியாழன் வரை: காலை 7.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை, மற்றும் மதியம் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.
வெள்ளிக்கிழமை: காலை 7.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை, மற்றும் மதியம் 2.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை.
பொது மக்கள் மொபைல் இரத்த தான முகாம்கள் பற்றிய புதுப்பிப்புகளுக்கு Derma Darah Penang Facebook பக்கத்தையும் பார்வையிடலாம்.
நோன்பு இருப்பவர்கள் சஹூர் (Sahur) உணவுக்குப் பிறகு நான்கு மணி நேரம் கழித்து இரத்த தானம் செய்யலாம். அதற்காக அவர்கள் போதுமான தூக்கம் எடுத்திருக்க வேண்டும், போதுமான தண்ணீர் குடித்திருக்க வேண்டும் மற்றும் நல்ல உடல்நிலையில் இருக்க வேண்டும்.
























