ஏஜி அலுவலகம் குதப்புணர்ச்சி தீர்ப்புக்கு எதிராக முறையீட்டை சமர்பித்துள்ளது

 தமது முன்னாள் உதவியாளரை குதப்புணர்ச்சியில் ஈடுபடுத்தியதாகக் கூறும் குற்றச்சாட்டிலிருந்து  எதிர்த்தர்ப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமை விடுவித்த கோலாலம்பூர் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக சட்டத் துறைத் தலைவர் அலுவலகம் முறையீடு செய்து கொண்டுள்ளது.

கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் கிரிமினல் பதிவகத்தில் முறையீட்டுக்கான நோட்டீஸ் இன்று மாலை மணி 4.30க்குத் தாக்கல் செய்யப்பட்டது.

அதன் துணைப் பதிவதிகாரி அந்தத் தகவலை உறுதி செய்துள்ளார்.

(பின்னர் விரிவாக)