மேல் முறையீடு செய்வதற்கான அனுமதியை தியோ பெங் ஹாக் குடும்பம் பெற்றது

தியோ பெங் ஹாக் மரணம் மீதான விசாரணையில் திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டதை நீதித் துறை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்ற விண்ணப்பத்தை நிராகரித்த ஷா அலாம் உயர் நீதிமன்ற முடிவை எதிர்த்து மேல் முறையீடு செய்து கொள்ள தியோ பெங் ஹாக் குடும்பத்துக்கு முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

“அந்த முடிவு ஏகமனதானது. மேல் முறையீடு செய்து கொள்வதற்கான விண்ணப்பத்தை நாங்கள் அனுமதிக்கிறோம். அதனை மேலும் தொடருவதற்கு சட்ட ரீதியான அம்சம் அதில் உள்ளது,” என மூன்று நீதிபதிகளைக் கொண்ட குழுவுக்கு தலைமை தாங்கிய நீதிபதி சுலைமான் டாவுட் கூறினார்.