தைப்பூசத்தின் போது மஇகா 50,000 உணவுப் பொட்டலங்களை விநியோகம் செய்யும்

தைப்பூசக் கொண்டாட்டங்களை ஒட்டி பிப்ரவரி மாதம் 6ம் தேதி அதிகாலையிலிருந்து மஇகா தனது தலைமையகக் கட்டிடத்துக்கு வெளியில் பக்தர்களுக்கு 50,000 உணவுப் பொட்டலங்களையும் சுவைபானங்களையும் விநியோகம் செய்யவிருக்கிறது.

பிப்ரவரி 7ம் தேதி விநியோகம் தொடங்கும் எனத் தவறுதலாக செய்தி வெளியிடப்பட்டு விட்டது என மஇகா அதிகாரி ஒருவர் பெர்னாமாவிடம் கூறினார்.

கோலாலம்பூரில் உள்ள ஜாலான் துன் எச் எஸ் லீ-யில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து சிலாங்கூரில் உள்ள பத்துமலை ரத ஊர்வலம் செல்லும் போது 100,000 இந்து பக்தர்கள் உடன் செல்வர் என எதிர்பார்க்கப்படுவதாக நேற்று மஇகா தலைமைச் செயலாளர் எஸ் முருகேசன் கூறியிருந்தார்.

பெர்னாமா

TAGS: