பழனிவேல் பேரா மஇகா தலைவர் பதவியை எடுத்துக் கொண்டுள்ளார்

பேராக் மஇகா தலைவர் பொறுப்பை அந்தக் கட்சியின் தலைவர் ஜி பழனிவேல் ஏற்றுக் கொண்டுள்ளார். அது உடனடியாக அமலுக்கு வருகிறது.

பேராக்கில் கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்தும் நோக்கத்தை அந்த நடவடிக்கை கொண்டுள்ளதாக பழனிவேல் சொன்னார்.

“அந்த மாநில மஇகா கட்சியை மட்டுமின்றி வாக்காளர்கள் அடித்தளத்தையும் வலுப்படுத்த வேண்டியுள்ளது,” என அவர் இன்று விடுத்த அறிக்கை கூறியது.

“பேராக் மஇகா-வுக்கும் பிஎன் -னுக்கும் முக்கியமானதாகும். நமது வாக்காளர்கள் திரும்ப வந்து கொண்டிருக்கின்றனர் என்ற ஊகத்தில் அனைவரும் இருந்தாலும் மக்களுடைய உள்ளத்தையும் மனதையும் கவருவதற்கான முயற்சிகளை நாம் தொடர வேண்டும்,” என பழனிவேல் விளக்கினார்.

அந்த முடிவு திடீரென எடுக்கப்பட்டதல்ல என வலியுறுத்திய அவர், சில காலமாகவே தாம் அது பற்றி சிந்தித்து வந்ததாகவும் அவர் சொன்னார்.

தாம் விரைவில் அந்த மாநில, தொகுதித் தலைவர்களைச் சந்திக்கப் போவதாகவும் அடுத்து வரும் பொதுத் தேர்தலை எதிர்கொள்வது மீது அவர்களுடைய முழுக் கவனமும் இருக்க வேண்டும் என அவர்களிடம் வலியுறுத்தப்படும் என்றும்  பிரதமர் துறை அமைச்சருமான பழனிவேல் மேலும் கூறினார்.

பெர்னாமா

TAGS: