அரசாங்கத்திற்கு எதிரான வழக்கை இண்ட்ராப் தமிழிலும் மலாயிலும் பதிவு செய்கிறது

தமிழ்ப்பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்கான ஒரு முயற்சியில் இண்ட்ராப் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் கல்வி அமைச்சர் முகைதின் யாசின் ஆகியோருக்கு எதிராக தொடரவிருக்கும் வழக்கு தமிழிலும் மலாயிலும் பதிவு செய்யப்படும்.

இதை “மிகப் புதுமையான சம்மன்ஸ்” என்று வர்ணித்த இண்ட்ராப் தலைவர் பி. உதயகுமார், இந்த சிவில் வழக்கு எதிர்வரும் வியாழக்கிழமை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் காலை மணி 11க்கு பதிவு செய்யப்படும் என்றார்.