அம்ப்ரின் புவாங் தலைமைக் கணக்காய்வாளராக மீண்டும் நியமனம்

அம்ப்ரின் புவாங், மீண்டும் ஓராண்டுக் காலத்துக்குத் தலைமைக் கணக்காய்வாளராக  நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.அவரது நியமனம் பிப்ரவரி 23-இலிருந்து அமலுக்கு வருவதாக அரசாங்கத் தலைமைச் செயலாளர் முகம்மட் சிடிக் ஹசான் இன்று அறிவித்தார்.

அவர் மீண்டும் நியமனம் செய்யப்படுவதற்கு பேரரசர் ஒப்புதல் தெரிவித்திருப்பதாக ஓர் அறிக்கையில் அவர் கூறினார்.

அம்ப்ரின் 2006 பிப்ரவரி 23-இலிருந்து 2008 பிப்ரவரி 22வரை ஈராண்டுகளுக்கு முதன்முதலில் தலைமைக் கணக்காய்வாளராக நியமிக்கப்பட்டார்.

2008 பிப்ரவரி 23-இலிருந்து 2010 பிப்ரவரி 23வரை மேலும் ஈராண்டுக்காலத்துக்கு மறுநியமனம் செய்யப்பட்டு அவர் அப்பதவியை வகித்து வந்தார். 2010-இல்,மேலும் ஈராண்டுக்காலத்துக்கு, இவ்வாண்டு பிப்ரவரி 22வரை, தலைமைக் கணக்காய்வாளராக அவர் மறுநியமனம் செய்யப்பட்டார்.

-பெர்னாமா