மஇகா-வின் தேசிய பொங்கல் விழா

மஇகா, பிப்ரவரி 26-இல் தேசிய அளவில் பொங்கல் விழா ஒன்றை ஏற்பாடு செய்யும் என அதன் தலைமைச் செயலாளர் எஸ்.முருகேசன் இன்று கோலாலம்பூரில் தெரிவித்தார்.

அது,சிலாங்கூர், காப்பாரில் தெனாகா நேசனல் பெர்ஹாட் தலைமையகத்தில் நடத்தப்படும் என்றாரவர்.அதில் பிரதமர் நஜிப் அப்துல் ராசாக்கும் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்நிகழ்வு மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தும் என்பதுடன் மஇகா தலைவர்கள் மக்களை நெருங்கிச் செல்ல ஒரு வாய்ப்பையும் உருவாக்கித் தரும் என்று முருகேசன் கூறினார்.

“மஇகா பொதுத்தேர்தலை எதிர்நோக்கவும் மாற்றுக்கட்சியினர் கைகளுக்குச் சென்றுவிட்ட மாநிலங்களைத் திரும்பப் பெறக் கடுமையாக பாடுபடவும் ஆயத்தமாக உள்ளது”, என்றாரவர்.

-பெர்னாமா