எல்லா துன்களையும் விசாரிக்க வேண்டும்-மகாதிர்

தம் 22 ஆண்டுக்கால ஆட்சியில் பொதுப்பணம் விரயமாக்கப்பட்டதாகக் கூறப்பட்டு அதை ஆராய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதற்கு எதிர்வினையாற்றியுள்ள முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், விசாரணை என்று வந்துவிட்டால் எல்லா துன்களையும் அல்லது எல்லா முன்னாள் பிரதமர்களையும் விசாரிக்க வேண்டும் என்றார் .

“என்னை மட்டுமல்ல….எல்லா துன்களையும் விசாரிக்க வேண்டும்.அவர்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளையும் சேர்த்துத்தான்”.புத்ரா ஜெயாவில் செய்தியாளர் கூட்டமொன்றில் கலந்துகொண்டபோது முன்னாள் பிரதமர் இவ்வாறு காட்டமாகக் கூறினார்.

அவர் பிரதமராக இருந்தபோது பொதுப்பணத்தில் ரிம100பில்லியன் வீணடிக்கப்பட்டதாகவும் அதை விசாரிக்க வேண்டும் என்றும்  டிஏபி பெருந்தலைவர் லிம் கிட் சியாங் கோரிக்கை விடுத்திருப்பது பற்றிக் கேட்கப்பட்டதற்கு மகாதிர் இவ்வாறு கருத்துரைத்தார்.