பெர்சே ஆர்வலர் சரவாக்கில் நுழையத் தடை

பெர்சே 2.0 இயக்கக்குழு உறுப்பினர் மரியா சின் அப்துல்லா சரவாக்கில் கால்வைக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அவர் இன்று காலை  கூச்சிங் விமான நிலையம் சென்றடைந்தபோது குடிநுழைவு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

“அது மாநில அரசின் உத்தரவு என்றவர்கள் கூறினர்.சரவாக் செல்ல விரும்பினால் முதலமைச்சர் அலுவலகத்துக்கு எழுதி அனுமதி பெற வேண்டும் என்றும் கூறப்பட்டது”, என்று மரியா சொன்னார். 

அவர் சரவாக் சென்று அங்குள்ள பெர்சே ஆர்வலர்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார்.