தெங்கு ரசாலி அம்னோவிலிருந்து விலக மாட்டார்

அம்னோ மூத்த தலைவர்களில் ஒருவரான தெங்கு ரசாலி, அம்னோ தலைவர்களுடன் கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தாலும் தம் சகா காடிர் ஷேக் ஃபாதிரைப் பின்பற்றிக் கட்சியிலிருந்து விலக மாட்டார்.

சீனமொழி நாளேடான ஓரியெண்டல் டெய்லி நியுசுக்கு வழங்கிய நேர்காணலில் தெங்கு ரசாலி, தம் விசுவாசம் என்றும் அம்னோவுக்குத்தான் என்பதை வலியுறுத்தினார்.

“நான் விரும்பியதைச் சொல்ல முடிகிறது, செய்ய முடிகிறது.நான் கூறும் சில கருத்துகள் அம்னோவில் சிலருக்குப் பிடிக்காதிருக்கலாம். அதற்காக,  அம்னோவைவிட்டு விலக வேண்டும் என்பது பொருளல்ல”, என்றாரவர்.

அது ஒரு குடும்பத் தகராறு போன்றது.சகோதரர்கள் அடிக்கடி சர்ச்சையிட்டுக் கொள்வதை வைத்து அவர்கள் உறவுகளைத் துறந்து பிரிந்து செல்ல வேண்டும் என்பது முறையாகாது என்றாரவர்.

முன்னாள் நிதி அமைச்சரான தெங்கு ரசாலி,அவரும் முன்னாள் பிஎன் தலைவர்கள் சிலரும் சேர்ந்து நிறுவிய அரசுசாரா அமைப்பான அமானாவின் தலைவராக இருக்கிறார்.

கடந்த வாரம், அமானாவின் துணைத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான காடிர் ஷேக் ஃபாதிர் அம்னோவிலிருந்து விலகினார்.

TAGS: