‘போலீஸ் ஊழல்’ மற்றும் பல விவகாரங்களில் மீது ஏஜி மௌனம் சாதிப்பது ‘இக்கட்டான சூழ்நிலையை’ உருவாக்கியுள்ளது

முன்னாள் ஐஜிபி (தேசிய போலீஸ் படைத் தலைவர்) அப்துல் கனி பட்டெய்ல் (ஏஜி) , கூட்டரசு அமைச்சர் அனீபா அமான் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் பல ஊழல்கள் மீது ஏஜி என்ற சட்டத் துறைத் தலைவர் “ஆழ்ந்த மௌனம்” சாதிப்பது ஏஜி அலுவலகத்துக்கு மிகவும் இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதாக டிஏபி கூறுகிறது.

“அத்தகைய சூழ்நிலைகளில் ஏஜி மௌனமாக இருப்பது நியாயமாகத் தெரியவில்லை. குறைந்த பட்சம் அவரது நடத்தை வெட்கக் கேடானது,” என எதிர்க்கட்சி எம்பி-யான கோபிந்த் சிங் டியோ இன்று காலை அனுப்பிய மின் அஞ்சலில் கூறியுள்ளார்.

அப்துல் கனியின் போக்கு ஏஜி அலுவலகத்துக்கு ‘தர்ம சங்கடத்தை’ அளித்துள்ளது என்றும் அந்த பூச்சோங் எம்பி கூறினார்.

“அந்த மௌனம் குறித்து டிபிபி என்னும் அரசு வழக்குரைஞர்கள் கூட அதிருப்தி அடையத் தொடங்கியுள்ளனர். தங்கள் சொந்த அலுவலகத்தின் மீதே இவ்வளவு கருமேகங்கள் சூழ்ந்துள்ள வேளையில் வேலை செய்வதும் நீதி பற்றிப் பேசுவதும் அவர்களுக்குச் சிரமமாக உள்ளது”, என்றார் அவர்.

“உண்மையாகச் சொன்னால் அவர்கள் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளனர்.”