அழிக்கப்படும் தேசிய விடுதலை போராட்டங்களும்; மீட்கப் படாத மனித அவலங்களும்!

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப்போரின் போது சிறீலங்கா அரசால் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் உலகத் தமிழர்களால் அனுஷ்டிக்கப்படும் முள்ளிவாய்யக்கால் நினைவு நாள் இவ்வாண்டு ஜொகூரில் அடுத்த மாதம் 19ஆம் தேதி (19.05.2012) ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

அழிக்கப்படும் தேசிய விடுதலை போராட்டங்களும்; மீட்க படாத மனித அவலங்களும் எனும் கருப்பொருளோடு  ஏற்பாடு செய்ய பட்டுள்ள இந்நிகழ்வு தொடர்பாக ஜொகூரில் இயங்கும் பொது அமைப்புகளுடனான விளக்க கூட்டம்  செம்பருத்தி தோழர்களின் பணிமனையில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இவ்விளக்க கூட்டத்திற்கு ஜொகூரில் தமிழ் உணர்வுடன் இயங்கி வரும் அனைத்துப் பொது அமைப்புகளும் வந்து கலந்துகொள்ளும்படி ஏற்பாட்டுக்குழுவினர் அழைக்கின்றனர்.

காலம் : 14 April 2012 / நேரம்: மாலை மணி 4

இடம்: 16a Jalan Pisang Kapas 1, Pekan Kangkar Pulai ( Sebela Petronas ), Johor Bahru

தொடர்பு: முருகன் 010 6655882

TAGS: