நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னரே மஇகா பட்டியல் பிரதமரிடம் கொடுக்கப்படும்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னரே பிரதமர் நஜிப்பிடம் கொடுக்கப்படும் என்று மஇகா தலைவர் ஜி. பழனிவேல் கூறினார்.

ஆனால், அப்பட்டியல் தயாராகி விட்டதா என்பதை அவர் கூறவில்லை.

“பல மாநிலங்களில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் நான் அது குறித்து முடிவு எதுவும் எடுக்கவில்லை”, என்று அவர் கூறினார்.