எம்ஐஇடி சித்திரக்கலா குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார்

மஇகாவின் கல்விக் கரமான எம்ஐஇடி அமைப்பின் முன்னாள் தலைமை அதிகாரியான பி. சித்திரக்கலாவுக்கு எதிராகச் சுமத்தப்பட்ட ரிம4 மில்லியன் சம்பந்தப்பட்ட  மூன்று மோசடிக் குற்றச்சாட்டுகளிலிருந்து அவரை கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றம் இன்று விடுவித்தது.

சித்திரக்கலா, 40, மீதான வழக்கை திரும்பப் பெற்றுக்கொள்வதாக துணை அரசாங்க வழக்குரைஞர் கெவின் மொரெஸ் செய்து கொண்ட மனுவை அனுமதித்ததைத் தொடர்ந்து  நீதிபதி செ முகமட் ஸுல்கிப்லி ஜூசோ அத்தீர்ப்பை அறிவித்தார்.

TAGS: