அரசாங்க ஊழியர்களுக்கு போனஸ், பிரதமர் அறிவித்தார்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அரசாங்க ஊழியர்களுக்கு பாதி-மாதச் சம்பளம் போனசாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.குறைந்த பட்சம் ரிம500 வழங்கப்படும்.அதேவேளை பணிஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சிறப்புத் தொகையாக ரிம500 பெறுவார்கள்.

இந்த போனஸ் ஆகஸ்ட் 9-ல் வழங்கப்படும் என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் பிரதமர் கூறினார்.

இந்த போனசாலும் சிறப்புத்தொகையாலும் 1.27மில்லியன் அரசு ஊழியர்களும் 657,000பணிஓய்வுபெற்ற அரசு ஊழியர்களும் பயனடைவர்.