வேதமூர்த்தி சிங்கப்பூரிலிருந்து புறப்படவிருக்கிறார்

ஹிண்ட்ராப் இயக்கத்தின் தலைவர் பி. வேதமூர்த்தி தற்போது சிங்கப்பூரிலிருந்து மலேசியாவிற்கு புறப்படத் தயாராகிக் கொண்டிருக்கிறார். சிங்கப்பூரில் அவர் எந்தப் பிரச்னையையும் எதிர்கொள்ளவில்லை.

இன்னும் ஒரு மணி நேரத்தில், பிற்பகல் மணி 12.30 அளவில் வேதமூர்த்தி சிங்கப்பூரிலுள்ள மலேசிய குடிநுழைத்துறை அலுவலகத்தை வந்தடைவார் என்று தொடர்பு கொண்டபோது வி.சாம்புலிங்கம் கூறினார்.

பிரச்னைகள் ஏதும் இருக்கும் என்று கருதவில்லை என்று கூறிய அவர், அங்கு சென்று சேர்ந்த பின்னர்தான் எதுவும் நிச்சயமாகக் கூற முடியும் என்றார்.

சிங்கப்பூர் எல்லையைக் கடந்த பின்னர், வேதமூர்த்தி பிற்பகல் மணி 3.00 க்கு ஒரு செய்தியாளர் கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று சாம்புலிங்கம் மேலும் கூறினார்.

மாலை மணி 5.00 க்கு  ஜோகூர், உலுதிராம் தாமான் டத்தோ செல்லத்தில் அமைந்திருக்கும்  ஸ்ரீ கருமாரியம்மன்  ஆலயத்தில் நடைபெறும் பிராத்னையை முடித்துக் கொண்ட பின்னர் வேதமூர்த்தி இன்றிரவே சிரம்பான் செல்வார்.  

 

TAGS: