ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி மலேசியா வந்து சேர்ந்தார்

லண்டனில் வசித்து வந்த ஹிண்ட்ராப் தலைவர் பி. வேதமூர்த்தி இன்று பகல் மணி 12.20-க்கு சிங்கப்பூரிலிருந்து மலேசியா வந்து சேர்ந்தார்.  அவருடன் அவருடைய ஆதரவாளர்கள் சுமார் 30 பேர் இருந்தனர்.

வேதமூர்த்தி மலேசிய குடிநுழைவுத்துறை முகப்பை வந்ததடைந்ததும் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் அவரது கடப்பிதழை பெற்றுக்கொண்டு அவரை அலுவலகத்திற்குள் வருமாறு கேட்டுக்கொண்டனர்.  ஆனால், அந்த அழைப்பை வேதமூர்த்தி ஏற்றுக்கொள்ளவில்லை.

பின்னர், வேதமூர்த்தியுடன் இருந்தவர்களின் கடப்பிதழ்களை எடுத்துகொண்ட அதிகாரிகள் சில நிமிடங்களுக்குப் பின்னர் வேதமூர்த்தியையும் மற்றவர்களையும் மலேசியாவுக்குள் நுழைய அனுமதி வழங்கினர்.

தற்போது வேதமூர்த்தி ஒரு தனிப்பட்ட இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறார்.  பிற்பகல் மணி 3.00 க்கு அவர் செய்தியாளர்களிடம் பேசவிருக்கிறார்.

TAGS: