சபா பிஎன் செனட்டர் ஒருவர் இன்று விலகுவார்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சபாவுக்கு மேற்கொண்ட பயணத்துக்கு அடுத்த நாளான இன்று இன்னொரு பிஎன் பேராளரான செனட்டர் மைஜோல் மாஹாப் ஆளும் கூட்டணியிலிருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த ஜுலை 29ம் தேதி துவாரான் எம்பி வில்பிரெட் பூம்புரிங் கட்சி மாறிய சடங்கின் போது எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுடன் மைஜோல் மேடையில் காணப்பட்ட போது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதே நாளன்று பியூபோர்ட் எம்பி லாஜின் உக்கினும் எதிர்க்கட்சிக்குத் தாவினார்.

உப்கோ உதவித் தலைவருமான மைஜோல் தாம் உப்கோவிலிருந்து விலக எண்ணியுள்ளதாக அறிவித்தார். ஆனால் பக்காத்தான் ராக்யாட்-டுடன் தாம் அதிகாரப்பூர்வமாக சேரப் போவதாக அவர் சொல்லவில்லை.

என்றாலும் மைஜோல் இன்று அதனை முறையாக அறிவிப்பார் என்பதை முதுநிலை பிகேஆர் வட்டாரங்கள் உறுதி செய்தன.

மைஜோல் மாறுவார் என சபா பிஎன் கோத்தா பெலுட் எம்பி அப்துல் ரஹ்மான் டாஹ்லானும் எதிர்பார்க்கிறார்.

மைஜோல் பக்காத்தானில் சேருவாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும் பக்காத்தானுக்கு நட்புறவாக விளங்கும் சபா சீர்திருத்த முன்னணியில் இணைந்துள்ள மாநில அமைப்புக்களுடன் தம்மைப் பிணைத்துக் கொள்வார் எனக் கருதப்படுகின்றது.