பொதுத் தேர்தல் அக்டோபரில் நடக்கும் சாத்தியமில்லை-தெங்கு அட்னான்

பொதுத் தேர்தல் அக்டோபர் மாதம் பொதுத் தேர்தல் நடத்தப்படும் சாத்தியமில்லை என்று நினைக்கிறார் அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர்.

அது, ஹஜ்ஜு யாத்திரைக்குரிய காலம் என்பதால் பொருத்தமான மாதம் அல்ல என்றாரவர்.

“அப்போது பொதுத் தேர்தலை நடத்தினால் அரசாங்கம் இஸ்லாத்தை மதிக்கவில்லை என்பார்கள். அதனால்,பொதுத் தேர்தல் அக்டோபரில் நடத்தப்படும் என்று  நினைக்கவில்லை”, என்று புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

இன்னொரு நிலவரத்தில், புத்ரா ஜெயா அம்னோ அதன் ஆண்டு பேராளர் கூட்டத்தை செப்டம்பர் முதல் தேதி நடத்தும் என்றும் அன்றே அதன் ஹரி ராயா பொது உபசரிப்பும் நடைபெறும் என தெங்கு அட்னான் தெரிவித்தார்.

அக்கூட்டத்தைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-பெர்னாமா