அரசியல் ஆய்வாளர் ஒங் கியான் மிங் டிஏபியில் சேர்ந்தார்

பிரபல அரசியல் ஆய்வாளரான ஒங் கியான் மிங் டிஏபியில் சேரப்போவதாக இன்று அறிவித்தார். பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அவர் அக்கட்சியில் சேர்வது அந்த மாற்றரசுக்கட்சிக்கு ஊக்கத்தைக் கொடுத்துள்ளது.

“முக்கியமான தேசிய விவகாரங்களில் டிஏபியின் நிலைப்பாடு என் அரசியல் நம்பிக்கைகளுடன் ஒத்துப்போகிறது.

“ஆய்வாளர் என்ற நிலையிலிருந்து விலகி அரசியலில் பங்கேற்கும் தருணம் வந்து விட்டதாக நினைக்கிறேன்.அதன்வழி மலேசியாவில் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்று நம்புகிறேன்”, என்று கோலாலம்பூரில் டிஏபி தலைமையகத்தில் செய்தியாளார்களிடம் அவர் கூறினார்.

அச்செய்தியாளர் கூட்டத்தில் ஒங்குடன் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், உதவித் தலைவர் டான் கொக் வாய், தேசிய விளம்பரப் பிரிவுத் தலைவர் டோனி புவா முதலிய டிஏபி தலைவர்களும் கலந்துகொண்டார்கள்.

 

TAGS: