நஜிப்: எங்களுக்கு இன்னொரு தவணைக்கு வாய்ப்பு கொடுங்கள், நாங்கள் நிறையச் செய்ய முடியும்

பிஎன், அரசாங்கத்தை அமைப்பதற்கு இன்னொரு தவணைக் காலத்துக்கு வாய்ப்பு கொடுங்கள் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதன் வழி பிஎன் நாட்டுக்கு இன்னும் நிறைய வளர்ச்சியைக் கொண்டு வர முடியும் என அவர் சொன்னார்.

“என்னை நம்புங்கள். மக்கள் ஆதரவுடன் நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுகின்ற போராட்டத்தை அரசாங்கம் தொடரும்.”

“எங்களுக்கு புதிய கட்டளை கிடைத்தால் நாங்கள் இன்னும் நிறையச் செய்ய முடியும்,” என அவர் மேலும் கூறினார்.

நஜிப் இன்று காலை கோலாலம்பூரில் நகர்ப்புற உருமாற்ற மய்யத்தை தொடக்கி வைத்த பின்னர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் உரையாற்றினார்.

 

 

TAGS: