பெட்டாலிங் ஜெயா மேயருடைய இட மாற்றத்தை சிலாங்கூர் மந்திரி புசார் முடக்கி வைத்தார்

பெட்டாலிங் ஜெயா மேயர் முகமட் ரோஸ்லான் ஸாக்கிமானுடைய இட மாற்ற ஆணை இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது

பொதுச் சேவைத் துறையுடன் விவாதங்கள் முடிவடையும் வரையில் சிலாங்கூர் உயர்நிலை  அதிகாரிகள் இட மாற்றங்கள் முடக்கி வைக்கப்பட்டுவதாக சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் அறிவித்துள்ளதே அதற்குக் காரணமாகும்.

அந்த முடக்கத்தைத் தொடர்ந்து ரோஸ்லானுடைய இட மற்றம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தி ஸ்டார் இணையப் பதிப்பு தெரிவித்தது.

ரோஸ்லான் இடத்துக்கு துணை மாநிலச் செயலாளர் நூர்டின் சுலைமான் செல்வதாக இருந்தது.

நூர்டின் இடத்தை சிலாங்கூர் மாநில நிதி அதிகாரி முகமட் அரிப் அப்துல் ரஹ்மான் நிரப்புவதாக இருந்தது.

அந்த இட மாற்றங்கள் குறித்து மாநில அரசுக்கும் பொதுச் சேவைத் துறைக்கும் இடையில் விவாதங்கள் தொடருவதாகவும் காலித் தெரிவித்தார்.

அந்த விவகாரம் வாராந்திர மாநில ஆட்சி மன்றக் கூட்டத்தில் இன்னும் விவாதிக்கப்படவில்லை எனத் தெரிகிறது.