தீபாவளி தினத்தில் இடியுடன் மழை பெய்யும்

நாளை தீபாவளியன்று பரவலாக இடியுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வுத் துறை அறிவித்துள்ளது.

பினாங்கு, கிளந்தான், திரங்கானு ஆகியவற்றில் மழை பெய்யும் என ஆரூடம் கூறப்பட்டுள்ளது.

கெடா, பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், சபா ஆகியவற்றின் கடலோரப்பகுதிகளில் காலையில் மழை பெய்யும்.

மற்ற மாநிலங்களில் காலையில் வெயில் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிற்பகலில் சிலாங்கூர், கோலாலம்பூர், பெர்லிஸ், கெடா, புத்ராஜெயா, மலாக்கா, ஜோகூர், பாகாங், சரவாக், சபா ஆகியவற்றில் இடியுடன் பரவலாக மழையும் பெய்யும்.

கிளந்தான், திரங்கானு ஆகியவற்றிலும் பிற்பகலில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அன்றாட வானிலை சூழ்நிலைகளை பொது மக்கள் www.met.gov.my என்ற இணையத் தளத்துக்குச் சென்று அறிந்து கொள்ளலாம்.

-பெர்னாமா

TAGS: