சுங்கைப்பட்டாணியில் கலவரங்கள் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம்

முகநூல், டிவிட்டர், வலைப்பதிவுகள் ஆகியவற்றில் வேண்டுமென்றே பரப்பப்பட்டு வரும் தவறான தகவல்களையும் வதந்திகளையும் நம்ப வேண்டாம் என போலீசார் பொது மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளனர்.

பொறுப்பற்ற சில தரப்புக்கள் கூறிக் கொள்வதைப் போல சுங்கைப்பட்டாணியில் மோதல்களே, கலவரங்களோ, நிகழவில்லை. யாரும் மரணமடையவில்லை. பள்ளிவாசல்களுக்கும் எரியூட்டப்படவில்லை என கெடா மாநிலத் துணைப் போலீஸ் தலைவர் அப்துல் கபார் ரஜாப் கூறினார்.

“சுங்கைப்பட்டாணியும் நிலைமை அமைதியாகவும் கட்டுப்பாட்டுக்குள்ளும் இருக்கிறது,” என நேற்றிரவு பின்னேரத்தில் சுங்கைப்பட்டாணியில் நடத்திய நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

பெர்னாமா