டிஏபி: நிலவரி கட்டாத நிலத்தைப் பறிமுதல் செய்க

1land1பிஎன் மலிவான விலையில் நிலங்களை அகப்படுத்திய விவகாரங்களைத் தொடர்ந்து அம்பலப்படுத்திவரும் டிஏபி, ஈராண்டுகளாக நிலவரி கட்டப்படாதிருக்கும் பூச்சோங் அம்னோவுக்குச் சொந்தமான நிலத்தைப் பறிமுதல் செய்யுமாறு சிலாங்கூர் மந்திரி புசாரைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.

அது, 2008-க்குமுன் பிஎன் ஆட்சிக்காலத்தில் குறைந்த விலையில் பெறப்பட்ட 24 நிலங்களில் ஒரு பகுதியாகும் என்று சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் ஹன்னா இயோ கூறினார்.

பூச்சோங்கில்  0073899, 0073900 என்னும் லாட் எண்களைக் கொண்ட அந் நிலத்துக்கு நிலவரியாக முறையே ரிம26,935.50, ரிம110,869.20 கட்டப்படவில்லை என்று இயோ கூறினார்.

“இதன் தொடர்பில் தேசிய நிலச் சட்டத்தின்படி, நிலத்தைப் பறிமுதல் செய்வது உள்பட,  பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுக்குக் கடிதம் வரைவோம்”, என்றாரவர். இயோ, இன்று காலை செய்தியாளர் கூட்டமொன்றில் இவ்வாறு கூறினார்.

TAGS: