மாஹ்புஸ் இன்னும் ஒரு வாரத்தில் தீபக்கை சந்திப்பார்

mahpuzசட்ட நடவடிக்கையிலிருந்து விலக்கு அளிப்பதாக பக்காத்தான் ராக்யாட் வாக்குறுதி அளிக்க வேண்டும் என கம்பள வியாபாரி தீபக் யெய்கிஷன் விடுத்துள்ள கோரிக்கை குறித்து நடுவர் பணியாற்றுவதற்காக பாஸ் உதவித் தலைவர் மாஹ்புஸ் ஒமார் தீபக்கை இன்று தொடக்கம் அடுத்த ஒரு வாரத்துக்குள் தாம் சந்திக்கப் போவதை பாஸ் உதவித் தலைவர் மாஹ்புஸ் ஒமார் உறுதிப்படுத்தியுள்ளார்.

“என்னைச் சந்திக்க விருப்பம் தெரிவித்ததற்காக நான் தீபக்கிற்கு நன்றி கூறுகிறேன்.”

“என்றாலும் நான் இப்போது கெடா சுல்தான் பிறந்த நாளை ஒட்டிய கொண்டாட்டங்களில் நான் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன். அதற்குப் பின்னர் நான் நபிகள் நாயகம் பிறந்த நாள் நிகழ்வுகளில் சம்பந்தப்பட்டுள்ளேன்.”mahpuz1

ஆகவே குறைந்த பட்சம் இப்போது தொடக்கம் ஒரு வாரத்திற்குள்  நான்  அவரைச் சந்திக்க முடியும் என எதிர்பார்க்கிறேன்,” என ஊடகங்களுக்கு மின் அஞ்சல் வழி அனுப்பியுள்ள செய்தியில் மாஹ்புஸ் குறிப்பிட்டுள்ளார்.

தீபக் விடுத்துள்ள கோரிக்கை மீது நடுவராகப் பணியாற்ற பாஸ் உதவித் தலைவர் நேற்று முன் வந்தார். தாம் தீபக் பதிலுக்குக் காத்திருக்கப் போவதாகவும் அவர் சொன்னார்.