சபாஷ் பிரச்னையில் சுல்தான் தலையிட வேண்டும் என பிகேஆர் இளைஞர் பிரிவு விரும்புகிறது

tanksசிலாங்கூர் மாநிலத்தின் தண்ணீர் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு நீர் வளச் சலுகையைப் பெற்றுள்ள சபாஷ் நிறுவன நடவடிக்கைகளை சிலாங்கூர் அரசாங்கம் எடுத்துக் கொள்வதற்கு உதவி செய்யும் பொருட்டு சுல்தான் அதில் தலையிட வேண்டும் என சிலாங்கூர் பிகேஆர் இளைஞர் பிரிவு விரும்புகிறது.

“சிலாங்கூர் பிகேஆர் இளைஞர் பிரிவும் சிலாங்கூர் பக்காத்தான் ராக்யாட் தலைவர்களும் தண்ணீர்  பிரச்னையைத் தீர்ப்பதற்கு முயன்று வருகின்றனர். ஆனால் சபாஷ் விட்டுக் கொடுக்க மறுக்கிறது. மாநிலத்துக்கு உதவும் நடவடிக்கைகளை எடுக்கவும் மறுக்கின்றது.”

“சிலாங்கூர் சுல்தான் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த விஷயத்தில் தலையிட்டு சபாஷ் நடவடிக்கைகளை மாநில அரசாங்கம் ஏற்றுக் கொள்வதற்கு உதவ வேண்டும் என முறையீடு செய்து கொள்ளும் மகஜர் ஒன்றை நாங்கள் சமர்பிப்போம்,” என அதன் தலைவர் அஸ்மிஸாம் ஸாமான்ஹுரி கூறினார்.

அவர் இன்று பெட்டாலிங் ஜெயாவில் பிகேஆர் தலைமையகத்தில் நிருபர்களிடம் பேசினார். கிள்ளானில்  மஸ்ஜித் சுல்தான் சுலைமானில் ஜனவரி 25ம் தேதி வெள்ளிக்கிழமைத் தொழுகைக்குப் பின்னர் பேரணி ஒன்றை நடத்தவும் தாங்கள் எண்ணியிருப்பதாக அவர் சொன்னார்.

 

TAGS: