மகாதிருக்கு அன்வாரை எதிர்த்துப் போட்டியிடும் ‘எண்ணம் இல்லை’

1an mahaமுன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், ஒரு நேரம் தம்மிடம் துணைப் பிரதமராக இருந்து இப்போது மாற்றரசுக்கட்சித் தலைவராகவுள்ள அன்வார் இப்ராகிமை எதிர்த்துப் போட்டியிடும் எண்ணம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.

“நான் (அரசியலிலிருந்து) ஓய்வு பெற்றுவிட்டேன். திரும்பிச் செல்லும் எண்ணம் கிடையாது. ஆனால், நான்  பிரதமராவதற்கு ஒரு காலத்தில் உதவியவர்களுக்கு ஆதரவாக பரப்புரை செய்வதில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறேன்”, என்று நேற்றிரவு செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் தெரிவித்தார்..

மேற்கு மலேசிய மலாய் ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் நோர்டின் முகம்மட் விடுத்த சவாலுக்கு மறுமொழியாக மகாதிர் இவ்வாறு கூறினார்.

முன்னாள் பிரதமர் அன்வார் பற்றி நீண்ட காலமாக தப்பும் தவறுமாக பேசி வந்துள்ளார்.. அதற்கு முடிவுகட்ட இருவரும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நோர்டின் கூறியிருந்தார்..

TAGS: