ஜொகூர் PSM கிளை ஏற்பாட்டில் ‘மக்கள் போராட்ட இரவு விருந்து’ நிகழ்ச்சி

1psm1மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.), ஜொகூர் நூசா ஜெயா கிளை ஏற்பாட்டில் ‘மக்கள் போராட்ட இரவு விருந்து’ நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை (23.02.2013 ) மாலை மணி 7.30-க்கு ஜொகூர், ஜாலான் பீசாங் காபாஸ் 1-ல் அமைந்துள்ள செராம்பி தெராத்தாய் உணவகத்தில் (Restoran Serambi Teratai, Jalan Pisang Kapas 1, Kangkar Pulai, Johor) நடைபெறவுள்ளது.

‘மாற்றத்தை நோக்கி 13-வது பொதுத் தேர்தல்’ எனும் கருப்பொருளுடன் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில், மலேசிய சோசலிசக் கட்சியின் தேசியத் தலைவர் டாக்டர் நசீர் ஹசிம், அதன் பொதுச் செயலாளர் எஸ்.அருட்செல்வன், சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மைக்கல் ஜெயக்குமார், பிகேஆர் ஜொகூர் மாநிலத் தலைவர் சுவா ஜுய் மெங், பாஸ் கட்சியின் தேசிய உதவித் தலைவர் சாலாவுடின் ஆயுப், பக்ரி நாடாளுமன்ற உறுப்பினர் எர் தெக் ஹுவா (ஜசெக), பல்கலைக்கழக சட்டக் கல்வி மாணவி கே.எஸ்.பவானி மற்றும் பலர் உரையாற்றவுள்ளனர்.

மேலும், ஜொகூர் வாழ் மக்களும் தாங்கள் எதிர்நோக்கும் பல பிரச்னைகள் (‘பெங்கேராங்’ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, நில அபகரிப்பு, மேம்பாட்டுத் திட்டங்களால் ஓரங்கட்டப்பட்ட பூர்வக்குடியினர்) குறித்து பேசவுள்ளனர்.

இரவு விருந்துடன் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து பயன்பெறுமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

தொடர்புக்கு :- 017 7540597 , 016 7334469

TAGS: