அம்பிகா: மலேசிய இந்தியர்களே, தவறாமல் வாக்களிப்பீர்களா?

13 ஆவது பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பெர்சேயின் 8 கோரிக்கைகளும் ஏற்றுகொள்ளப்படாது என்ற நிலை தென்படுகிறது.  ஆனாலும், வாக்களிப்பது நமது கடமை என்று பெர்சேambiga அமைப்பின் இணைத் தலைவர் அம்பிகா நேற்று இரவு கோலாலம்பூர் சீன அசெம்பிளி மண்டபத்தில் நடைபெற்ற தமிழர் பணிப் படை பேரணியில் பேசுகையில் கூறினார்.

தேர்தல் நியாயமாக நடத்தப்பட வேண்டும். ஊடகங்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும். தேர்தல் ஆணணயம் சுயேட்சையாக செயல்பட வேண்டும் என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

“வாக்களிப்பது உங்கள் கடமை” என்று கூறிய அம்பிகா, “மலேசிய இந்தியர்களே, எதிர்வரும் பொதுத் தேர்தலில் நீங்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பீர்களா என்று அங்கிருந்தவர்களைக் கேட்டார். வாக்களிப்போம் என்று கூட்டத்தினர் பதில் கூறினர்.

நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட தலைவர்கள் சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் சேவை செய்ய வேண்டும் என்றார்.

TAGS: