தபப223 பேரணி: 4 முழு அமைச்சர்கள் வேண்டும், அவ்வளவு பிரச்னைகள்

raviஇந்நாட்டை வளப்படுத்திய இந்தியர்களை வந்தேறிகள் என்று கூறுகிறார்கள். அந்த இந்தியர்களின் உழைப்பால் ஓர் இனம் பலனடைந்து வருகிறது. இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை. உயிரோடு போலீஸ் நிலையத்திற்கு போன இந்தியர் பிணமாக வெளியில் வருகிறார் என்று நெகிரிசெம்பிலான் சட்டமன்ற உறுப்பினர் ரவி தமிழர் பணிப் படை பேரணியில் கூறினார்.

தமிழர் பணிப் படை ஓர் அரசியல் கட்சியல்ல என்றார் ரவி.

இந்தியர்களுக்கு அடையாள அட்டை இல்லை. நாடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பொருளாதார பின்னடைவு பல சிரமங்களுக்கு இட்டுச் செல்கிறது. இவற்றை எல்லாம் தீர்ப்பதற்கு பக்கத்தான் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

நமக்கு 4 முழு அமைச்சர் மற்றும் 7 துணை அமைச்சர் பதவிகள் கொடுக்கப்பட வேண்டும். ஏன்? நமக்கு அவ்வளவு பிரச்னைகள் என்று கூறிய ரவி, “நம் நாடு தமிழ் நாடல்ல; நம் நாடு மலேசியா”. அதுதான் நமது உரிமையின் அடிப்படை என்றாரவர்.

TAGS: