லாஹாட் டத்து துப்பாக்கிச் சண்டையில் பலர் பலி

1gunfight

லாஹாட் டத்துவில் மூன்று வாரங்களாக நீடித்த இழுபறிக்குப் பின்னர், ஊடுருவல் செய்த சூலு சுல்தானின் ஆள்களும் மலேசியப் படையினரும் துப்பாக்கிச் சூடுகளைப் பரிமாறிக் கொண்டதில் பலர் கொல்லப்பட்டதாக பிலிப்பின்ஸ் ஊடகங்கள் அறிவித்துள்ளன.

ஆனால், சேதம் எந்தத் தரப்பில் என்பது தெரியவில்லை.

மலேசியர்கள் தாக்குதலைத் தொடங்கியதாக பிலிப்பின் ஸ்டார் தெரிவித்தது.

அது, ஒரு வானொலிச் செய்தியை மேற்கோள்காட்டி  அவ்வாறு கூறியது.  அச்செய்தியில்  சூலு சுல்தான் எனத் தம்மைப் பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கும் ஜாமாலுல் கிராமின் சகோதரரும் லாஹாட் டத்துவில் ஆயுதம் தாங்கிய ஊடுருவல்காரர்களுக்குத் தலைமை தாங்குபவருமான ஸ்ஸிமுடி கிராம் உள்பட அவரின் உறவினர் பலர் பேட்டி காணப்பட்டதில் அவர்கள் துப்பாக்கிச் சண்டையில் பலர் கொல்லப்பட்டதாக தெரிவித்தனர்.