தப்பிச் சென்றவர்களைக் கண்டு பிடிக்கும் நடவடிக்கை விரிவுபடுத்தப்பட்டுள்ளது

IGPசில ஊடுருவல்காரர்கள் கம்போங் தண்டுவோ-விலிருந்து சுற்றியுள்ள பகுதிகளுக்குத் தப்பியிருக்கலாம் எனத் தெரிய வந்த பின்னர் பாதுகாப்புப் படைகள் தங்களது நடவடிக்கைப் பகுதியை விரிவுபடுத்தியுள்ளன.

“நாங்கள் அந்த நடவடிக்கையின் போது எதிரிகளுடைய நடமாட்டத்தைச் சில பகுதிகளில் கண்டு பிடித்தோம். அதனால் தொடக்கத்தில் தேடும் பணி மேற்கொள்ளப்பட்ட பகுதியை விரிவு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது,” என தேசியப் போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் கூறினார்.

“ஊடுருவல்காரர்கள் சில இடங்களை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். எங்கள் பாதுகாப்புப் படைகள் அவர்களை விரட்டிக் கொண்டிருக்கின்றன (4 சதுர கிலோ மீட்டர் சுற்றளவு ). அவர் இன்று காலை லஹாட் டத்து, பெல்டா சஹாபாட் இல்லத்தில் நிருபர்களிடம் பேசினார்.