போலீஸ்: சுலு தலைவர் தடுத்து வைக்கப்பட்டார், ஊடுருவல்காரர்களின் நடமாட்டம் முடக்கப்பட்டது

பாதுகாப்புப் படைகள் லஹாட் டத்துவுக்குள் ஊடுருவிய சுலு பயங்கரவாதிகளின் இராணுவத் தளபதியை சிறைப்  பிடித்துள்ளன. அவர் இன்று அதிகாலையில் செம்போர்ணாவில் கைது செய்யப்பட்டார். அந்த விவரங்கள் தேசியப் போலீஸ் படைத் துணைத் தலைவர் காலித் அபு பாக்கார் வெளியிட்டார். 40 வயதான அந்த ஆடவர் தமது மனைவியுடன் சதுப்பு…

குற்றம் சாட்டப்பட்டவர்: லாஹாட் டத்துவில் சண்டையிட பணம் கொடுக்கப்பட்டது

தாவாவ் உயர் நீதிமன்றத்தில் சாபாவில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் அதற்காக தனக்குப் பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறினார். பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட எண்மரில் ஒருவரான ஹூலாண்ட் கல்பி, பாஜாவ் மொழியில் பேசினார். அவர் சொன்னதை மொழிபெயர்ப்பாளர் ஒருவர் மொழிபெயர்த்துக் கூறினார். தான் செய்தது முட்டாள்தனம்…

எட்டு பிலிப்பினோக்கள் தாவாவ் உயர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்

இன்று தாவாவ் உயர் நீதிமன்றத்தில் எட்டு பிலிப்பினோக்கள்மீது மாட்சிமை தங்கிய பேரரசருக்கு எதிராக போர் தொடுத்ததாகவும் அவர்கள் ஒரு பயங்கரவாத கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும் குற்றம் சுமத்தப்பட்டது. அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிறுவப்பட்டால் தூக்குத்தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம். நேற்று அந்த எண்மரும் மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் ஒன்றுக்குக்…

சூலு இராணுவத் தலைவர் அஸ்ஸிமுடி ஒரு மலேசியர்?

ராஜா மூடா சூலு அக்பிமுடின் என்னும் அஸ்ஸிமுடி கிராம் ஒரு மலேசியரே, அவர் சாபா, கூடாட்டில் உதவி மாவட்ட அதிகாரியாகக்கூட பணியாற்றியிருக்கலாம். இவ்வாறு பிகேஆர்  கூறிக்கொள்கிறது. சாபாவில் கடந்த மாதம்  ஊடுருவல் தொடங்கியதிலிருந்து யார் இந்த அஸ்ஸிமுடி என்ற கேள்வி எழுந்தது என்று கூறிய  பிகேஆர் வியூக இயக்குனர்…

நேற்று சாபாவில் ஊடுருவல்காரர்களுடன் நான்கு தடவை போலீசார் மோதிக்கொண்டனர்

லாஹாட் டத்து அருகே, தஞ்சோங் பத்துவில் ஊடுருவல்காரர்களைத் தேடிப்பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுள்ள பாதுகாப்புப் படைகள் நான்கு தடவை பகைவர்களுடன் மோதிக்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை மணி 8.05-க்கும் மாலை மணி 5-க்குமிடையில் நிகழ்ந்த அச்சண்டைகளில் எவரும் காயமடையவில்லை என சாபா போலீஸ் ஆணையர் ஹ்ம்சா தாயிப் கூறினார். நேற்று சண்டாகானில்…

சுலு சுல்தான் ஆதரவாளர்கள் மீது பல கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படும்

கடந்த புதன்கிழமையன்று தாவி தாவி மாநிலத்துக்கு அப்பால் பிலிப்பின்ஸ் கடற்படை தடுத்து வைத்த சுலு சுல்தான் ஆதரவாளர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 35 பேர் மீது பிலிப்பின்ஸ் அரசாங்கம் பல கிரிமினல் குற்றச்சாட்டுக்களை சுமத்தவிருக்கிறது. "அவர்களுக்கு எதிராக பொருத்தமான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்கான ஏற்பாடுகளை கூட்டுக் குழு ஒன்று செய்து வருகிறது,"…

தியான் சுவா மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது (விரிவாக)

லஹாட் டத்து கிளர்ச்சி நெருக்கடியில் அம்னோ சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டும் ஒரு கருத்தை வெளியிட்டதாக பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா மீது இன்று தேச நிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவர் அந்தக் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார். கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில்…

தியான் சுவா மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

லஹாட் டத்து கிளர்ச்சி நெருக்கடியில் அம்னோ சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டும் ஒரு கருத்தை வெளியிட்டதாக பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா மீது இன்று தேச நிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவர் அந்தக் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார். கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில்…

சூலு பயங்கரவாதிகளுடன் நிகழ்ந்த மோதலில் படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்

  இன்று காலை லாஹாட் டத்துவில் சுங்கை ஞாமோக்கில் பாதுகாப்புப் படைகளுக்கும்  ‘சூலு அரச இராணுவம்’ எனச்  சுய-பிரகடனம் செய்துகொண்டிருக்கும் ஆயுதம்தாங்கிய கும்பலுக்குமிடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஆயுதப்படை வீரர் ஒருவர் பலியானார். பாதுகாப்புப் படையினர், தஞ்சோங் பத்து-க்கு அருகில் சுங்கை ஞாமோக்கைச் சுற்றிலும் துடைத்தொழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது…

செம்பூர்னாவில் ஆறு சந்தேகப் பேர்வழிகள் கைது

செம்பூர்னா, கம்போங் பங்காவ்-பங்காவ்-இல் போலீஸ் மேற்கொண்ட ஒரு நடவடிக்கையில், தென் பிலிப்பீன்ஸைச் சேர்ந்த சூலு பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ளவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் அறுவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் போலீசாரால் மிகவும் தேடப்படும் ஒரு நபராவார். வாட் 69 மின்னல் படையினரும் பொது நடவடிக்கை படையினரும் சந்தேகப் பேர்வழிகள்…

‘ஊடகங்கள் ஊடுருவல்காரர்களைப் ‘பயங்கரவாதிகள்’ என்றுதான் குறிப்பிட வேண்டும்’

சாபா, லாஹாட் டத்துவில்  ஒப்ஸ் டவுலாட் குறித்து செய்தி சேகரிக்கும் செய்தியாளர்கள்  சூலு ஊடுருவல்காரர்களைப் ‘பயங்கரவாதிகள்’ என்றுதான் இனி  குறிப்பிட வேண்டும்.  அத்துடன் சூலு சுல்தான் என்றும் கூறக்கூடாது. சாபா முதலமைச்சர் மூசா அமான் (இடம்) தலைமையில் செயல்படும் சாபா பாதுகாப்புக் குழு, இன்று காலை  இந்த உத்தரவை…

பயத்தின் காரணமாக மாணவர்களில் பாதிப்பேர்தான் பள்ளி செல்கிறார்கள்

சாபாவில் சூலு இராணுவம் என்று கூறிக்கொள்வோரின் ஊடுருவலை அடுத்து தேசா கெஞ்சானா பெல்டாவில் ஒரு வாரமாக மூடிக்கிடந்த பள்ளிக்கூடங்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டபோது மாணவர்களில் பாதிப்பேர்தான் வகுப்புகளுக்கு வந்திருந்தனர். எஸ்எம்கே தேசா கெஞ்சானாவில், எல்லா வகுப்புகளும் பாதித்தான் நிரம்பி இருந்தன. ஊடுருவலை எண்ணிப் பெற்றோரும் மாணவரும் அச்சம் கொண்டிருப்பதுதான்…

எதிரிகளுடைய சுரங்கப் பாதைகள் ஏதும் கண்டு பிடிக்கப்படவில்லை

தெற்கு பிலிப்பின்ஸிலிருந்து ஊடுருவல்காரர்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் நிர்மாணிக்கப்பட சுரங்கப் பாதை ஒன்றின் வழியாக கம்போங் தண்டுவோ-வுக்குள் நுழைந்ததாக அந்தக் கிராம மக்கள் சொல்வதை சபா போலீஸ் ஆணையாளர் ஹம்சா தாயிப் மறுத்துள்ளார். "அத்தகைய சுரங்கப் பாதை ஏதும் இருப்பதாக எங்களுக்கு இது வரை தகவல்…

தியான் சுவா கட்டுரை மீது போலீசார் பிகேஆர் ஏட்டிடம் விசாரித்தனர்

லஹாட் டத்து பூசல் மீது பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா தெரிவித்த கருத்துக்கள் சம்பந்தப்பட்ட கட்டுரை ஒன்றின் மீது போலீசார் இன்று பிகேஆர் ஏடான Keadilan Daily-யின் ஆசிரியரையும் நிருபரையும் விசாரித்தனர். பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைமையகத்தில் அந்த ஏட்டின் ஆசிரியர் பாஸால்லா பிட்-டும் நிருபரான ஆயிஷா…

‘சிவப்பு பகுதியில்’ நிருபர்கள் துப்பாக்கிக்காரனைக் கண்டனர்

பாதுகாப்புப் படையினர் ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்களை வேட்டையாடி வரும் 'சிவப்பு பகுதியில்' உள்ள தஞ்சோங் லாபியான் கிராமத்துக்குள் இன்று காலை நுழைந்த நிருபர்கள் துப்பாக்கிக்காரன் ஒருவனைக் கண்டார்கள் அந்தக் கிராமத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டிருந்த போலீஸ் சாலைத் தடுப்பில் யாரும் இல்லாததால் அந்தப் பகுதி பாதுகாப்பாக உள்ளது என…

சதித் திட்டம் எனக் கூறப்படுவதை பிலிப்பின்ஸ் விசாரிக்கும்

சபாவில் சுலு சுல்தான் ஊடுருவலுக்குப் பின்னணியில் சதித் திட்டம் இருக்கலாம் எனக் கூறப்படுவதை விசாரிக்கப் போவதாக பிலிப்பின்ஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அந்த வன்முறைக்கான காரணத்தை ஆய்வு செய்ய சதித் திட்டம் பற்றி புலனாய்வு செய்யப்படும் என அந்த நாட்டின் துணை அதிபர் அலுவலகப் பேச்சாளர் சொன்னார். சபாவில் உருவாகியுள்ள…

மேலும் ஒரு ஊடுருவல்காரர் சுட்டுக்கொல்லப்பட்டார்

லாஹாட் டத்துவில், பாதுகாப்பு வளையத்தைத் தாண்ட முயன்ற மேலும் ஒரு ஊடுருவல்காரரைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றதாக போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் கூறினார். “காலை ஆறு மணிக்கு ஊடுருவல்காரர்களில் ஒருவர் தஞ்சோங் பத்துவில் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி தப்பிச் செல்ல முயன்றார். “அப்போது பாதுகாப்புப் படைகளுக்கும் அவருக்குமிடையில்…

மனிதாபிமான தூதுக்குழுவுக்கு பிலிப்பின்ஸ் அனுமதி கேட்டது

பிலிப்பீன்ஸ்,  மனிதாபிமானக் குழு ஒன்றை  அனுப்பி சாபாவில் சண்டையில் ஈடுபட்டுள்ள பிலிப்பினோ ஊடுருவல்காரர்களின் நிலையைக் கண்டறிய  மலேசியாவிடம் அனுமதி கேட்டுள்ளது. சாபாவின் லாஹாட் டத்துவில் மலேசியப் பாதுகாப்புப் படைகளுக்கும் ஊடுருவல்காரர்களுக்குமிடையில் நடந்துள்ள சண்டைகளில் இதுவரை 52 பிலிப்பினோக்கள் கொல்லப்பட்டும் 10 பேர் கைதாகியும்  இருப்பதாக மலேசியா அறிவித்துள்ளது.  மலேசிய…

சுலு இளவரசி: அஸ்ஸிமுடி ‘பாதுகாப்பாக’ இருக்கிறார்

சுலு சுல்தான் மூன்றாவது ஜமாலுல் கிராமின் சகோதரர் அஸ்ஸிமுடி கிராம் 'பாதுகாப்பாக' இருப்பதாக அந்த சுல்தானுடைய புதல்வி இளவரசி ஜேசல் கிராம் கூறுகிறார். அஸ்ஸிமுடி தமது சகோதரர்களில் ஒருவருடன் இன்று அதிகாலையில் தொலைபேசி வழி பேசியதாகவும் தாமும் தமது பிரிவினரும் பாதுகாப்பாக இருப்பதாக அவர் தெரிவித்ததாகவும் அவர் சொன்னார்.…

போர் விமானங்கள் பறக்கக் காணப்பட்டதன் பின்னர் புதிய வெடிப்பொலிகள்

லாஹாட் டத்து கிராமவாசிகள் புதிதாக வெடிப்பொலிகளைக் கேட்டதாகவும் அதே வேளை போர் விமாங்கள் ஒப்ஸ் டவுலாட் பகுதியை நோக்கிப் பறப்பதைக் கண்டதாகவும் கூறிக்கொள்கின்றனர். “கம்போங் தண்டுவோவை நோக்கி மூன்று ஜெட் விமானங்கள் பறந்து சென்றதைக் கண்டோம். அதன்பின் காலைமணி 7.30 அளவில் எட்டு வெடிப்பொலிகளைக் கேட்டோம்”, என பைகைல்…

ஐஜிபி : கொல்லப்பட்ட சூலு ஜெனரல், அஸிமுடி கிராம் அல்ல

பாதுகாப்புப் படைகளால் நேற்று கொல்லப்பட்ட  சூலு இராணுவ ஜெனரல்,  ஊடுருவல்காரர்களின் தலைவரும் சூலு சுல்தான் ஜமாலுல் கிராம் III-இன்  சகோதரருமான அஸிமுடி கிராம் அல்ல  என்று  தேசிய போலீஸ்படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் தெரிவித்துள்ளார். “அது அவர் (அஸிமுடி) அல்ல... அது (கண்டெடுத்த உடல்) அவர்களின் இன்னொரு தலைவருடையது”,…

சரணடைய மறுக்கும் ஜமாலுல், பிணையாளிகளை பரிமாறிக் கொள்ளலாம் என்கிறார்

சுலு சுல்தான் என தம்மைப் பிரகடனம் செய்து கொண்டுள்ள ஜமாலுல் கிராம், நிபந்தனையின்றி சரணடையுமாறு கோலாலம்பூர் விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளார். அதற்கு மாறாக பிணையாளிகளை பரிமாறிக் கொள்ளலாம் என யோசனை தெரிவித்தார். சபாவில் தற்போது மலேசியப் பாதுகாப்புப் படைகளுடன் துப்பாகிச் சண்டையில் ஈடுபட்டுள்ள தமது ஆதரவாளர்கள் நான்கு…

தீவிரவாதிகள் சரணடையாத வரையில் சண்டை நிறுத்தம் இல்லை

மூன்றாவது சுல்தான் ஜமாலுல் கிராமின் தன்மூப்பான சண்டை நிறுத்தத்தை மலேசியா நிராகரிப்பதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்துள்ளார். லஹாட் டத்து, கம்போங் தண்டுவோ-வில் உள்ள அவரது ஆதரவாளர்கள் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என அவர் கோரினார். "சண்டை நிறுத்தம் செய்ய முன் வந்ததற்கு மலேசியாவின் பதில் என்ன…