தியான் சுவா மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

Tian Chuaலஹாட் டத்து கிளர்ச்சி நெருக்கடியில் அம்னோ சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டும் ஒரு கருத்தை வெளியிட்டதாக பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா மீது இன்று தேச நிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

அவர் அந்தக் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.

கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில் அவருக்கு 5,000 ரிங்கிட் ஜாமீன் தொகையை நிர்ணயித்தது.

லஹாட் டத்துவில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு அம்னோ அரசாங்கத்தின் சதித் திட்டம் மார்ச் மாதம் முதல் தேதி காலை மணி 11 வாக்கில் சொன்னதாக 1948ம் ஆண்டுக்கான தேச நிந்தனைச் சட்டத்தின் பிரிவு 4 (1) (b)யின் கீழ் பத்து தொகுதிக்கான எம்பி-யுமான தியான் சுவா மீது குற்றம் சாட்டப்படுள்ளது.

தியான் சுவா சார்பில் வழக்குரைஞர்களான என் சுரேந்திரன், லத்தீபா கோயா, வில்லியம் லியோங், எரிக் பால்சென், மேலும் இருவர் ஆஜரானார்கள்.