அமெரிக் வெளியிட்ட தகவல்: நஜிப் அவர்களே நீங்கள் என்ன சொல்கின்றீர்கள் ?

najib“அந்தத் தகவல் நமது நீதி பரிபாலன முறையை பாதிக்கும். சட்டமும் மக்களும் பகடைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.”

‘இரண்டாவது சத்தியப் பிரமாணத்தை வரையுமாறு சிசிலுக்கு நஜிப் உத்தரவிட்டார்’

கலா: காலஞ்சென்ற தனிப்பட்ட துப்பறிவாளர் பி பாலசுப்ரமணியம் வெளியிட்ட இரண்டாவது சத்தியப் பிரமாணத்தை (அது, அவரது முதலாவது சத்தியப் பிரமாணத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது) வழக்குரைஞர் சிசில் அப்ரஹாம் தமது கட்சிக்காரர் பாலா கேட்டுக் கொண்டதால் தயாரிக்கவில்லை. மாறாக இன்னொருவர் சொன்னதால் அதனை வரைந்தார்.

அவ்வாறு செய்ததின் மூலம் அவர் தமது தொழில் நெறிமுறைகளை மீறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. காரணம் மூன்றாவது தரப்பின் உத்தரவை நிறைவேற்றியதின் மூலம் இரண்டாவது சத்தியப் பிரமாணத்தை அவரது கட்சிக்காரர் நெருக்குதலின் பேரில் கையெழுத்திட்டுள்ளார்.

ஒரு குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாக சிசில் மீது இப்போது குற்றம் சாட்டப்படலாம். ஏனெனில் பாலா சொல்லிக் கொண்டது போல  இரண்டாவது சத்தியப் பிரமாணத்தில் உண்மை அடங்கியிருக்கவில்லை.

இந்த விஷயத்தில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் பல விளக்கங்களை அளிக்க வேண்டும். அந்த விவகாரத்தில் அவருடைய பங்கு, பாலாவின் சத்தியப் பிரமாணம் திடீரென மாற்றப்பட்டதால் அவருக்கு உள்ள நன்மை ஆகியவையும் அவற்றுள் அடங்கும்.

லூயிஸ்: தீபக் ஜெய்கிஷன் அந்த குற்றச்சாட்டை சுமத்திய போது அவர் நம்பக் கூடியவர் அல்ல என நஜிப் சொன்னார். காரணம் ஜெய்கிஷன் கம்பள வியாபாரி என்றார் அவர். பாலா-வும் அதே குற்றச்சாட்டை சொன்னார். அவரும் நம்பத்தகுந்தவர் அல்ல. ஏனெனில் அவர் வெறும் தனியார் துப்பறிவாளர்.

இப்போது முதுநிலை வழக்குரைஞர் ஒருவர் அதனைத் தெரிவித்துள்ளார். நஜிப் அவர்களே நீங்கள் என்ன சொல்கின்றீர்கள் ?

பொருத்தம்: நமது சட்டத் தொழில் துறைக்கு இது கரும் புள்ளி. அந்தத் தகவல் நமது நீதி பரிபாலன முறையை பாதிக்கும். சட்டமும் மக்களும் பகடைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

கனத்த நீர்: நஜிப்பைத் தொடர்புபடுத்தும் பல தகவல்கள் அன்றாடம் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் பத்து எம்பி தியான் சுவா விஷயத்தில் உடனடி நடவடிக்கை. அதாவது தியான் சுவா சொன்ன வெறும் குற்றச்சாட்டு அடிப்படையில்.

நெருக்குதல் கொடுத்து ஒருவரை சத்தியப் பிரமாணம் செய்யுமாறு கட்டாயப்படுத்துவது பெரிய குற்றமாகும்.  போலீசார் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ?

என்ன நடக்கிறது: நஜிப் அவர்களே உங்களுக்காக வருந்துகிறேன். நாடாளுமன்றத்தை நீங்கள் கலைக்காமல் தாமதம் செய்யும் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நன்மையாக இல்லை. உண்மையில் அந்தத் தாமதம் உங்களுக்கு பாதிப்பையே ஏற்படுத்துகின்றது.

ஒவ்வொரு நாளும் பூதங்கள் கிளம்புகின்றன. அவற்றை மூடுவதற்கான நேரமும் அதிகாரமும் உங்களிடம் இல்லை. முற்பகல் செயின் பிற்பகல் விளையும்.

துணிச்சலாக அந்தத் தகவலை வெளியிட்ட வழக்குரைஞர் அமெரிக் சித்து-வுக்கு என் வாழ்த்துக்கள். இந்த நாட்டில் மிகவும் வலிமை வாய்ந்த ஒரு மனிதருடைய உத்தரவின் கீழ் சிசில் செயல்பட்டதால் நாம் அவரை மன்னிக்கத் தயாராக இருக்கிறோம். சிசில் இப்போது வெளியில் வந்து தமது தரப்பு கதையைச் சொல்ல வேண்டும்.

சிகியூமூவார்: ‘என்ன நடக்கிறது’ சொல்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

என்றாலும் அல்தான்துயா ஷாரிபுவின் உயிர் பறிக்கப்பட்டதற்கு பொறுப்பானவர்கள் தாங்கள் செய்த கொடிய குற்றத்திற்கு விலை கொடுக்க வேண்டும். நீதி நிலை நிறுத்தப்படும் போது அல்தான்துயாவின் ஆன்மாவும் பாலாவின் ஆன்மாவும் அமைதி அடையும்.

லூயிஸ்: சிசில் அப்ரஹாம் நீங்கள் உண்மையில் ஒரு கனவான். உண்மையைச் சொன்ன உங்களை நாங்கள் மதிக்கிறோம். தவறுகளை ஒப்புக் கொள்வதில் எந்தத் தப்பும் இல்லை.

இனி தீபக் உண்மையைச் சொல்ல வேண்டும். பாலா தமது பங்கைச் செய்து விட்டார். அந்த jigsaw புதிரில் கடைசி துண்டு உங்களிடம் உள்ளது. அதனைக் கொடுக்க உங்களுக்கு துணிச்சல் உள்ளதா எனப் பார்ப்போம்.

 

TAGS: