பக்காத்தானில் சேருங்கள்: ஒங் தி கியாட்டுக்கு ரபிஸி அழைப்பு

1ongகிள்ளான் துறைமுக தீர்வையற்ற வர்த்தக மண்டல ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த முன்னாள் மசீச தலைவர் ஒங் தி இயாட்டின் துணிச்சலைப் போற்றுவதாகக் கூறிய பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி, அவர் இன்னொரு அடியையும் துணிச்சலாக எடுத்து வைக்க வேண்டும் என்றார்.

அந்த முன்னாள் போக்குவரத்து அமைச்சர் மாற்றத்தை வேண்டும் மக்களுடன் சேர்ந்துகொள்ள வேண்டும் என்றாரவர்.

sulu1“துணிச்சலாக மாற்றத்தை நோக்கி வர வேண்டும். அதாவது பிஎன்னிலிருந்து பக்காத்தான் ரக்யாட்டுக்கு மாறி வர வேண்டும்.

“அந்தத் துணிச்சல் அவருக்கு இருக்கும் என்று நம்புகிறேன்”, என ரபிஸி மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

வரும் தேர்தலில் ரபிஸி (வலம்) பாண்டான் நாடாளுமன்றத் தொகுதியில் நிற்பார் என பிகேஆர் அறிவித்துள்ளது. ஒங்-தான் பாண்டான் தொகுதியின் நடப்பு எம்பி ஆவார்.

ஒங், தம் தொகுதியைத் தக்கவைத்துக்கொள்ளும் போட்டியில் குதிப்பாரா என்பது தெரியவில்லை. அவருக்கும் மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்குக்கும் உறவு நன்றாக இல்லை என்பதால் அவர் வேட்பாளராக்கப்படுவது சந்தேகமே.