அன்வார்: நான் பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் தான் இருப்பேன்

anwarபிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம், தமது பெர்மாத்தாங் பாவ் தொகுதியைத் தக்க வைத்துக்  கொள்ள மீண்டும் அங்கு களமிறங்கப் போவதாக அறிவித்துள்ளார்.

அந்த அறிவிப்பைத் தொடர்ந்து அவர் போட்டியிடும் தொகுதி குறித்து பல நாட்களாக நீடித்த வாதங்களுக்கு
முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பினாங்கில் விளக்கக் கூட்டங்களில் கலந்து கொண்டுள்ள அன்வார் நேற்றிரவு தாமான் பாவ்-ல்
மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் தமது முடிவை வெளியிட்டார்.

அதற்கு முன்னதாக பேராக் தம்பூனில் தாம் போட்டியிடக் கூடும் என அவர் கூறியிருந்தார்.

“பெர்மாத்தாங் பாவ் தொகுதிக்கு திரும்பியதும் நான் என் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். அந்தத் தொகுதி
மக்களுடனான உறவுகள் என் குடும்ப உறவுகளைப் போன்றது. எனக்கு நிலைமை சிரமமாக இருந்த காலம்
தொட்டு அந்தத் தொகுதி மக்கள் ஆதரவு அளித்து வந்துள்ளனர்,”

“2004 தேர்தலில் மற்ற அனவைரும் தோற்ற போது கூட அவர்கள் என் மனைவி வான் அஜிஸாவை
ஆதரித்தனர்,” என்றார் அன்வார்.

“நான் பெர்மாத்தாங் பாவ் மக்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். அதனால் நான் தொடர்ந்து இங்கு தான்
இருப்பேன். இது என் உள்ளத்தைத் தொடும் விஷயமாகும்,” என அவர் சொன்ன போது பலத்த கைதட்டல்
எழுந்தது.