சே ஜோஹானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என இப்ராஹிம் வேண்டுகோள்

அலிகடந்த சனிக்கிழமையன்று தமது வேட்பாளர் மனுவைச் சமர்பிக்காத பாசிர் மாஸ் அம்னோ தொகுதித் துணைத்  தலைவர் சே ஜோஹான் சே பா மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என இப்ராஹிம் அலி அம்னோ ஒழுங்கு  நடவடிக்கைக் குழுவைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

சே ஜோஹான் செய்தது  உண்மையில் பாரிசான் நேசனலுக்கு நன்மை பயக்கும் என்பதால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என நான் வேண்டிக் கொள்கிறேன்,” என அவர் பாசிர் மாஸில் கம்போங்
குபாங் பூனுட்டில் கூட்டம் ஒன்றில் கூறினார்.

இப்ராஹிம் தமது பாசிர் மாஸ் தொகுதியைத் தக்க வைத்துக் கொள்ள அங்கு மீண்டும் களமிறங்கியுள்ளார். அங்கு சுயேச்சையாக போட்டியிடும் அவர் பாஸ் கட்சியின் நிக் முகமட் நிக் அப்டு நிக் அப்துல் அஜிஸை நேரடிப் போட்டியில் சந்திக்கிறார்.