தேர்தல் மனுக்கள்: பக்காத்தான் எந்த சவாலையும் எதிர்கொள்ளும்

anwarபினாங்கு, சிலாங்கூர், கிளந்தான் ஆகியவற்றில் பக்காத்தான் அடைந்துள்ள வெற்றிக்கு எதிராக தொடுக்கப்படும் எந்த தேர்தல் மனுவையும் அல்லது சவாலையும் எதிர்கொள்ள பக்காத்தான் ராக்யாட் ஆயத்தமாக இருக்கிறது. இவ்வாறு பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார்.

தமக்குத் தெரிந்த வரையில் தகராறு ஏதுமில்லை என அவர் இன்று நிருபர்களிடம் கூறினார்.

“டிஏபி, பாஸ் அல்லது பிகேஆர் வெற்றி பெற்ற இடங்களுக்கு எதிராக வழக்கு இருந்தால் நாங்கள்
தயாராக இருக்கிறோம். ஆனால் அப்படி ஒன்றுமில்லை. ஒன்று கூட இல்லை,” என அன்வார்
பக்காத்தான் ராக்யாட் தலைமைத்துவ மன்றக் கூட்டத்துக்குப் பின்னர் சொன்னார்.