முன்னாள் மசீச தலைவர் ஒங் தி கியாட், தாம் செனட்டராக நியமிக்கப்பட்டு அமைச்சர் பதவி கொடுக்கப்படலாம் என்று கூறப்படுவதை மறுத்தார்.
இது வெறும் ஊகம் மட்டுமே என்றாரவர்.
“அப்படி நடக்கும் வாய்ப்பு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அமைச்சர் பதவிக்கு என்னைக் காட்டிலும் தகுதியுடைவர்கள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்குக் கிடைப்பார்கள்.
“மசீசாவோ பிஎன்னோ அண்மையில் முடிவடைந்த தேர்தலில் போட்டியிட என்னை ஒரு வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கவில்லை. அந்த வகையில் நான் அமைச்சர் பதவிக்குப் பொருத்தமானவனாக எனக்குத் தெரியவில்லை”.பெர்னாமா டிவியில் “ஹல்லோ மலேசியா” நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தி கியாட் இவ்வாறு கூறினார்.
மலாய் மெயில் நாளேட்டில் அப்படி ஒரு செய்தி வந்திருந்தது பற்றிக் கருத்துரைத்தபோதே அவர் அவ்வாறு சொன்னார்.
-பெர்னாமா
தேநீர் தயார்செய்யும் போது தேயிலையை வடிகட்டுவது வழக்கம் . ஆனால் ம இ காவில் வேட்பாளர்களை தெரிவு செய்யும் போது வேறுவிதமாக வடிகட்டுவார்கள். அதனாலேயே இன்றுவரை மண்ணை முத்தமிட்டுகொண்டிருகிறது. இனி கரை சேராது ! அதே போன்றுதான் ம சி சா விலும் நிறம் பிரித்து, ஆள்பார்த்து, திறைமைசாளிகளை ஓரங்கட்டினார்கள் , சொய் லேக் கவுந்து போனார். சரித்திரம் காணாத அளவிற்கு இந்த இரண்டு கட்சிகளும் தோற்று போயின , அம்னோவும் அதே கதிதான்!!!